பக்கம்:புது வெளிச்சம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஸ்திர நட்சத்திரங்களினிடையே புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி எனும் ஐந்து கிரகங்களும் சூரியன், சந்திரன் எனும் இரண்டு வானவிளக்குகளில் பூமியை வியப்புறுத்திக் கொண்டிருக்கும் காட்சியை காஸ்டீபன் ஊன்றி ஆராய்ந்துணர்ந்தார். இந்த ஏழு ஒளிகளின் பெயர்களையும் தாங்கி இனி வழங்கும் சூரிய உதயத்திலிருந்து பகலும், பகல் கழிந்து வரும் இரவும் சேர்ந்தது ஒரு நாளெனவும், காலமாகிய நாள் ஒளிகளின் பெயர் தாங்கி வருவதனால் அவை தெய்வீகமெனவும் அவர் நம்பினார். காலம் அனைத்துக்கும் காரணமாக உள்ளது எனக் கண்ட அவர் காலத்தை தெய்வமாக - அதீத சக்தியுடையதாக நினைத்ததில் தவறு கிடையாது. காலம் வெகு அருமையானது. வீண் செய்யக் கூடாதது. திருப்பிப் பெற முடியாதது. மனிதனின் எல்லாவிதமான சாதனைகளுக்கும் ஆதாரமானது. எனவே, சரியான முறையில் ஒவ்வொரு மனிதனும் அதன் அருமையறிந்து பயன்படுத்தி மகான்களாக வாழ வேண்டி நாட்களை வரிசைக்கிரமம் - அதாவது பூமிக்கும் அந்த வானொளிகளுக்கும் உள்ள துரமறிந்து பெயர் சூட்டிய விதம் நமக்கு வியப்பையூட்ட வல்லதாயுள்ளது.

தான் வசிக்கும் ஊருக்கருகிலிருந்த உயர்ந்த ஒரு மலைச் சிகரத்திலிருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் வானத்தைக் கூர்ந்து பார்த்துக் கிரகங்களின் இயக்க நிலைகளை ஆராய்ந்து கணக்கிட்டார். பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் - 1 வருடம் ஆவது போலவே, பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உள்ளதுரத்தை அவர் துல்லியமாகக் கணக்கிட்டுக் கண்டறிந்தார். அவருடைய கணிப்பு இது.

29.5 வருடங்கள் - சனி
11.86 வருடங்கள் - வியாழன்
1.88 வருடங்கள் - செவ்வாய்
1. வருடம் - சூரியன்
0.62 வருடம் - சுக்கிரன்
0.24 வருடம் - புதன்
0.07 வருடம் - சந்திரன்

புது வெளிச்சம்

144