பக்கம்:புது வெளிச்சம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர்கள், மற்றுமுள்ள மந்திரி பிரதானிகள் அனைவருமே இந்த நாள் கோள் எனும் பொய் வலையில் மாட்டிக் கொண்டு படும் அவத்தைக்கு அளவே கிடையாது. அதனால்தான் அறிஞர் பலர் இந்தப் பித்தலாட்டத்தை அந்தக் காலத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளனர்.

கர்நாடக தேசத்தில் அண்மைக் காலத்தில் வாழ்ந்த பசுவேசுவரர் என்பவர் கூறினார்: "நாளின் பெயருக்கும் மனிதனின் நல்லது கெட்டதற்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

ஒரு நாளில் உள்ள நாழிகைக்கும், நிர்ணயம் செய்து கொண்டுள்ள நல்ல காரியங்களின் வெற்றி தோல்விகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

வருடத்தின் பெயருக்கும், அந்த வருடத்தில் உண்டாகும் பலா பலன்களுக்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் கிடையாது" என்று.

ஆனதனால் நல்ல உள்ளமுடைய ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் நல்லதாகவே உள்ளது. கெட்ட நேரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. நாளிலும், நாழிகையிலும் தெய்வீக சக்தி உள்ளது என்று மக்களை நம்ப வைத்தவர்கள், ஜோதிடர்கள் என்று பேர்வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள், திருடர்கள் என்று நான் கூறினால் அதை மறுத்துக் கூற ஒருவனும் முன்வர மாட்டான்.

நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும் கடுகளவுமில்லாது தம்மை பிரம்மாவின் சிரசிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு சூழ்ச்சிக்காரக் கூட்டம் இன்றும் நாட்டை நாசப்படுத்தும் அதே போக்கில்தான் சென்று கொண்டுள்ளது. ஆயினும் என்ன? சத்தியம் வென்று தீரவே வேண்டும் என்று நாம் உண்மைகளை மேலும் தேடித் தீர வேண்டும்.

சாதியில், நான் பிராமணன் என்பவன் வேதத்தையே
விரோதித்தவனாகிறான்.

- வெ

122

கவிஞர் வெள்ளியங்காட்டான்