உலகில் உள்ள எல்லா மதங்களும் மனிதனை அவனிடமிருந்து திசை திருப்பி விடுவதாக உள்ளன. அவைகள் சொல்லுகின்றன, "கடவுளைப் பிரார்த்தியுங்கள், கடவுளை நம்புங்கள், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்" என்று. ஆனால் நமக்குத் தெரிகிறது இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக உலகைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார் என்றால் செங்திஸ்கான், தைமூர், நாதிர்ஷா, ஹிட்லர், ஸ்டாலின், ரீகன் போன்றோர் தேவையே இல்லையே. கடவுள் கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு ஹிரோவிமா, ஒரு நாகசாகிகளின் அழிவு ஏற்பட்டிருக்காது. இந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனிதன் ஐயாயிரம் சண்டைகளை உருவாக்கியிருக்கிறான். ஆகவே உலகை யாரும் நிச்சயமாக கவனிக்கவிலை.
எல்லாவிதமான வியாதிகளும் வளர்ந்து கொண்டே போகின்றன. புற்றுநோய், எய்ட்ஸ் வந்துவிட்டது. கோடிக்கனக்கான மக்கள் இத்தகைய நோய்களால் சிதைந்து போயிருக்கிறார்கள். இதைப்பற்றி கடவுளுக்கோ, மதத்தினருக்கோ எந்தவிதமான கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அமைப்பு மனிதனை எல்லாவிதத்திலும் அழிப்பனவாகவே அமைந்துள்ளது. அவனை அது ஒரு இயந்திரமாக மாற்றிவிடுகிறது. நமது அனைத்து கல்விக்கூடங்களும் மனிதனின் இயல்பை மிக வேகமாக அழிக்கின்ற ஒரு தொழிற் சாலையாக உள்ளது. அவை தீக்கதிரை நட்டமடையச் செய்கின்றன, ஆத்மாவை கொன்றுவிடுகின்றன. மனிதனை இயந்திரமாக மாற்றிவிடுகின்றன. பிறகு மனிதனைப் பற்றிய கவலையை விட்டு விடுகிறது.
புது வெளிச்சம்
123