பக்கம்:புது வெளிச்சம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேசப்பிதாவின் வேதங்கள் பற்றிய
சீரிய சிந்தனைகள்

வ்வளவுதான் சிறந்ததாயினும் அறிவுக்கும் (கவனிக்க) ஒழுக்கத்திற்கும் பொருந்தாத எந்த விளக்கத்தையும் நான் ஏற்றுக்கொள்ள இயலாது.

வேதங்களின் தனிப்பட்ட தெய்வீகத்தன்மையை நான் நம்பவில்லை. பைபிள், குரான், செந்த் அவஸ்தா ஆகிய புனித நூல்களும் வேதத்தைப் போலவே ஆன்மீகத் தொடர்புடையவை என்று நான் கருதுகிறேன்.

இன்றைய சாஸ்திரிகளும், சங்கராச்சாரியார்களும் அவர்கள் எவ்வளவுதான் அந்த நூல்களில் ஆழமான புலமை பெற்றிருப்பினும் இந்து மதத்தின் புனித நூல்களைப் பற்றி மிகவும் துல்லியமான விளக்கம் கொடுப்பதாகக் கூறினால், அதை நான் கடுமையாக மறுக்கிறேன். இதற்கு மாறாக இந்தப் புனித நூல்கள் பற்றிய நம்முடைய அறிவு பெரும்பாலும் குழப்பமான நிலையில் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில் அஹிம்சையிலும், சத்தியத்திலும், பிரம்மச் சாரியத்திலும் எவன் முழுவெற்றி அடைகிறானோ, பொன்னாசை, மண்ணாசை ஆகியவற்றை எவன் முழுவதுமாக துறக்கிறானோ அவன்தான் சாத்திரங்களைப் பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும், என்னும் முதுமொழியை நான் உறுதியாக நம்புகிறேன்.

124

கவிஞர் வெள்ளியங்காட்டான்