பக்கம்:புது வெளிச்சம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குரு, சிஸ்டிய பாரம்பரியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனாலும் இந்தக் காலத்தில் லட்சக்கனக்கானவர்களுக்குத் தனித்தனியாக குரு இருக்க முடியாது. ஏனெனில், ஆழ்ந்த அறிவுத்தாகத்தையும் பரிபூரணத் தூய்மையினையும் ஒருசேரக்கான முடியாது. குறிப்பிட்ட ஒரு மதத்தினுடைய உண்மையினை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டிய தில்லை. ஏனைய பெரிய மதங்களைப் போலவே இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளும் என்றும் மாறாதவை.

கோயில்களில் நடக்கும் குறைபாடுகளை நான் அறிவேன். சொல்லொணாத குறைபாடுகள் பல இருந்தபோதிலும் அவற்றை நான் நேசிக்கிறேன். முழுக்க முழுக்க நான் சீர்திருத்தவாதியே. ஆயினும் என் சீர்திருத்த உணர்வு இந்து தர்மத்தின் மிகச்சிறந்த குறிக்கோள்களைப் புறக்கணிக்கவில்லை. விக்கிரக ஆராதனையை நான் மறுக்கவில்லை. எனினும் விக்கிரகமானது என்னுள் எந்தவிதமான வழிபாட்டு உணர்ச்சியினையும் எழுப்பவில்லை.

நேஷனல் புக் டிரஸ்ட்டின், “எது இந்து மதம்” என்ற நூலிலிருந்து தமிழில் முனைவர், பழனி அரங்கசாமி.

நன்றி மஞ்சளி

புது வெளிச்சம்

125