பக்கம்:புது வெளிச்சம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிரார்த்தனைகளால் பலன்
இருக்கிறதா?

பிரார்த்தனைகளால் பலன் இல்லை என்கிறது ஜான் பெம்ப்ள் : பெலின் ஃபௌன்டேஷன்

11 கோடி ரூபாய் செலவிட்டுச் செய்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ள இந்த முடிவு, தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை கொஞ்சம் தடுமாறச் செய்யும். குருமார்களையும் சாமியார்களையும் ஏதாவது சமாதானம் சொல்லித் தப்பிக்க வைக்கும்.

பிரார்த்தனைகளின் உதவியால் நோய் நீங்குமா, நிவாரணம் கிடைக்குமா ? சாகக் கிடப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்களா? என்பதைக் கண்டுபிடிக்க மிகப்பெரிய அளவில் 3 வருடங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மேற்கூறிய முடிவை அடைந்துள்ளது.

1800 பைபாஸ் சர்ஜரி நோயாளிகளுக்கு இரண்டு கிறித்துவ சர்ச் குழுக்கள் 2 வாரங்கள் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தியது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 2 வார பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் அறுவைச்சிகிச்சைக்கு உட்படும் முன்னரும், பின்னரும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவு :

பிரார்த்தனை செய்யப்பட்டவர்களிலும், செய்யப்படாதவர் களிலும் எந்தவிதப் பெருத்த வேறுபாடுகள் காணப்படவில்லை. பிரார்த்தனை வழங்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் வழங்கப் படாதவர்களிலிருந்து பெரிய முன்னேற்றத்தை அடையவில்லை.

இதில் அதிர்ச்சிமிக்க செய்தி என்னவென்றால், தனக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்ட நோயாளிகள் முன்னேற்றத்திற்குப் பதிலாக மோசமாகத்தான் போனார்கள்.

இத்தனைபேர் கூடி நமக்கு பிரார்த்தனை செய்யப் போகிறார்களே! நமது நோயின் தீவிரம் அதிகமோ! என்ற கவலையிலேயே அதிக டென்சன் ஆகி அதிகப் பாதிப்புக்கு உள்ளாகி விட்டார்களாம்.

நன்றி : மஞ்சரி, டிசம்பர்
கவிஞர் வெள்ளியங்காட்டான்

126