பக்கம்:புது வெளிச்சம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 


புரட்சிக் கவிஞராய்ப் புறப்பட்ட
வெள்ளியங்காட்டான் அவர்களின் இன்னொரு
பரிமாணம் இந்த நூல். மதப் போர்வை
போர்த்துக் கொண்டு உலவும் பல புராதனச்
சொற்களுக்கு, மதச் சார்பற்ற, கடவுள் சார்பற்ற,
புதிய விளக்கங்களை, உண்மையான தத்துவ
விளக்கங்களை, கவிஞர் தமது வடமொழிச்
சாத்திரப் புலமைகொண்டு இந்நூலில்
விளக்கியிருக்கிறார்.

பலப்பல சமயத் தொடர்களுக்கு மெய்விளக்கம்
தருவதற்கு, ஏராளமான உபநிடதங்களையும்,
சமய சாத்திரங்களையும், தமிழ் நூல்களையும்
ஆதாரமாகக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார்.
'சோதிடம் சுதந்திர மக்களுக்கு மாட்டப்பட்ட
விலங்கு' என்பது கவிஞரின் தெளிவான முடிவு.

கவிஞர் புவியரசு


"கவிஞர் வெள்ளியங்காட்டானின்
கருத்தியல் சிந்தனையின் மற்றொரு
புதிய பரிமாணம் புது வெளிச்சம்.

கவிதை மொழியில் சமூகத்தின் சகல
பிம்பங்களையும் விசாரணைக்கு
உட்படுத்தியவர். கட்டுரையின் ஊடே
கனத்த உள்ளீடுகளால் கவனப்படுத்துகிறார்.

இந்நூல் இறையியல் சார்ந்த
கருத்துருவாக்கமல்ல... வாழ்வியலின்
இயல்பு நெறியியல் சார்ந்த அறிவுத் தேடல்".

தங்க. முருகேசன்