பக்கம்:புது வெளிச்சம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருள் செல்வத்தைக் காட்டிலும் இவ்வருள் செல்வம் நூறு மடங்கு சக்தியுள்ளது என நீங்கள் புரிந்து கொள்ளவில்லை; எனவே தேடிக்கொள்ளவில்லை; இதுதான் உண்மை.

ஒம், தத், சத் - இம்மூன்றும் ஒரே பொருள் பற்றிக் குறிப்பிடும் ஒலிகள். 'ஓம்' எனில் நான் என்பது பொருள். 'தத்' எனின் அது என்பது பொருள் 'சத்' - பிரம்மம். நானே அது; அது சத்-பிரம்மம். நான் வேறு பிரம்மம் வேறன்று; நானே அதுவாயுள்ளேன். ஆம், அகம் பிரம்மாஸ்மி நானே பிரம்மமாயுள்ளேன். இதைப் புரிந்துகொள்ளுங்கள். கடவுள் வெளியே இல்லை. உங்களிடத்தில் இருக்கிறார். வெளியே உள்ள அனைத்தும் பருபொருள் அப்பொருள்களாகிய நாம் சிவ சைதன்னியம்; எல்லாம் வல்ல மனிதர்களாயுள்ளோம். எனவே நீ சதா அறிவறிந்தொழுகு. அதுவே அறவழி ஒழுக்கம்; ஒழுக்கமே நீதி எனப்படுவது: ஒழுக்கமே சட்டமெனப்படுவதும் ஆம்.

அறவழி ஒழுக்கமறிந்து ஒழுகும் ஒருவன் பிறரால் ஆளப்படுவ தில்லை. தன்னைத் தானே ஆள்கிறதீர புருசனாகிறான். தன்னை அறிந்தவனாகிறான். சத் அல்லது தன்ஆத்மாவை அறிந்தவனுமாகிறான். பொய், புனைச்சுருட்டு, வஞ்சகம், சூது, பேராசை பொறாமை போன்ற மாசுகளை உன் உள்ளத்தில் படிந்துவிடாமல் எச்சரிக்கையாயிரு. படிந்திருந்தால், அதனை ஒரு நோய் என எண்ணிக் காலதாமதமின்றிக் களைந்தெறி;

'மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்தறம்' எனும் வள்ளுவர் வாக்கினை நினைவு கூர்ந்து பார். உள்ளத்தை மாசுபடுத்திக் கொண்டு நீ கோமானாய் வாழ்ந்தாலும் நோயாளியே! உனக்கு நீயே அடிமையாகிறாய், ஆசைக்கு அடிமையான எவனும் எதையும் ஆள அருகதை அற்றவனாகிறான்.

தன்னை அறிந்து கொள்ளாதவன், தலைவனை - ஆண்டவனை அறிந்துகொள்ள மாட்டான். அவன் ஆசைக்கயிற்றினால் ஆடும் பம்பரம்! எனவே, சொல், ஒம்தத் சத்' என நானே அது; அதுவே சத் எல்லாம் வல்ல இறை; என்றும் உள்ளது என்று. அசத்தாக வாழாதே அவலத்துக்காளாகாதே!

ஒம் தத் சத்



4 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்