பக்கம்:புது வெளிச்சம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'யாண்டு பல ஆயினும் நரையில வாகுதல்' எனும் புற நாநூறின் பாடலும் இந்த ரிதம் தான். திருவள்ளுவரின் இல்லறம், துறவறம் இரண்டும் இந்த ரிதமேதான். நீதியதிபதித்துவம் சமுதாயத்தின் சிவ நாடி, நயாபைசாக்களுக்கு பின்னால் ஒடிக்கொண்டிருக்கிற சுயநலச் சீமான்களின் முன்னோடிச் சமுதாயம் அழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டுள்ளது. நீதிக்குத் தலைவனங்காது. நெறிமுறை மறந்து திசை மாறிச்செல்லும் சமுதாயத்தின் எதிர்காலம் இருள் மூடியதாகவே இருக்கும். நிச்சயம், இதில் துளி ஐயம் இல்லை.

விவகார உண்மையை அதாவது அறநெறி ஒழுக்கத்தை ஏன் சமுதாயம் கை விட்டது? காரணம் இதுதான் பரமார்த்திக உண்மையான அடிப்படை சத்தியத்தை அறவே கைவிட்டது. தற்காலத் தமிழ் சமுதாயம் தீண்டத்தகாத ஒன்றாக அதை ஒதுக்கி வைத்து விட்ட்து. சத்தியத்தை அறவே மறந்துவிட்ட மக்களாகிய நாம் ஆத்மாவையே இழந்துவிட்டோம் என்பதில் துளி ஐயமும் இல்லை. நம்முடைய தாழ்வுகளனைத்துக்கும் நாமே தடமமைத்துக் கொடுத்து விட்டோம்.

'நமது மனம் பயமற்று விளங்கவில்லை, நமது தலை கம்பீரமாய் நிமிர்ந்திருக்கவில்லை. நமது அறிவு சுதந்திரத்துடன் பொலியவில்லை'. குறுகிய சாதி மதப் பிளைவுகளால் நாடு உடைந்து உருக்குலைந்துள்ளது. உண்மையின் ஆழத்திலிருந்து நமது சொற்கள் உதிப்பதே இல்லை. 'வெறும் பிரமையில் நாம் இன்றும் தள்ளப்படுகிறோம். இன்றைய விஞ்ஞானயுகத்தில் யானைப் பூசை செய்து ஞானம் பெற முயலுகிற நாம் முற்றிலும் பராதினர்கள். ஆம் சுய சிந்தனை அற்று எடுப்பார் கைப்பிள்ளை போல் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்'.

இந்தப் பாரதீனம் நீங்க நமக்கு இன்றும் கைவிளக்காக உள்ளது திருக்குறள். திருக்குறள் தெரிவிக்கிறது. 'இருமை வகை தெரிந்து கொள் அறம் பூண்டு அணிகலன் கொள்' என்று.

இம்மை மறுமை, இறப்பு பிறப்பு, இன்பம்துன்பம், இசை வகை ஈதல் ஏற்றல், வெப்பம் தட்பம், விருப்பு வெறுப்பு, உடைமை வறுமை, இரவு பகல், நினைவு மறதி, உணவு மலம், ஒழுக்கம் இழுக்கம், அறம் மறம்,மேன்மை கீழ்மை, பெருமை, சிறுமை, நன்மை தீமை - இன்னும் பற்பல.

புது வெளிச்சம்

ᗍ 15