பக்கம்:புது வெளிச்சம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவற்றில் நல்லது கொண்டு கெட்டது விட்டு உண்மையாக வாழ்க்கையில் மேற்கொண்டொழுகும்போதன்றி நீ யாரா யிருப்பினும் உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளுகிறாய் என்பதுதான் பொருள். உன் பிறவியை நீயே பாழாக்கி விட்டாய். வாழத் தெரியாது வாழ்ந்தவனாகிறாய் என்பதுதான் அர்த்தம்.

எனவே ரிதம் எனில் ஒழுங்கு. அழகு, உன்னுடைய உள்ளத்தில் இவ்விரண்டும் படிந்திருக்க வேண்டும். இது உன் வாழ்க்கைப் பாதையாக அமைந்திருக்க வேண்டும். இல்லையெனில் உன்வாழ்வு வெறும்சோற்று வாழ்வுதான்.

சோற்றுக்காக வாழும் ஒவ்வொருவனும் சுவர்க்கம் புக அருகதையற்றவனாகிறான். துதிகளும் தோத்திரங்களும் மதியற்றவர்களின் பிச்சைபொருள் என்பதைக் ஆராய்ந்து அறிந்துகொள்.

❖ படிப்பின் இரகசியம் பண்பாடுகளைக் கெளரவிப்பதில்
அடங்கியுள்ளது.
- எமர்சன்

❖ உன்னிடத்தில் உள்ளவற்றுள் எது மிக, மிக உயர்ந்ததாய்
உள்ளதோ, அதை நீ உலகத்திற்காக அர்ப்பணித்துவிடு.
- மகாத்மா காந்தி

❖ உலகில் நிரந்தரமான வெற்றியை உண்மைக்கே இயற்கை
உரியதாக்கி உள்ளது.

வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் என்றால், அந்தச் சுகமே
நரகமாகிவிடுகிறது.
- பெர்னாட்ஷா

16 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்