பக்கம்:புது வெளிச்சம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உபநிசத்தை ஆரியர்கள் தம் உடைமையாக மறைத்து வைத்துக் கொண்டு இன்றும் மக்களை உருவணக்கம் செய்து வைத்துக் கொண்டு வீணாக்கி வருகின்றனர் என்று நான் குற்றம் சுமத்துகிறேன் வந்த நீதி நிலையத்திலும் இதை நிரூபிக்கவும் தயாராய் இருக்கிறேன்.

சத்தியமே கடவுள், ஒழுக்கமே நடைமுறை என்று கூறி இப்பகுதியை முடிக்கிறேன்.

❖ எந்த அரசு நாட்டு மக்களின் சீவாதார உரிமைகளை
   அலட்சியப்படுத்துகிறதோ அந்த அரசு வெகு விரைவில்
   அழிந்துவிடும்.
- திப்பு சுல்தான்

❖ அன்பு இதயத்தின் இளமை; சிந்தனை அதன் வளர்ச்சி;
   பேச்சு அதன் கிழத்தனம்.
- கிப்ரான்

❖ 'சமுதாயம்’ எனும் பயிரில், ஒழுக்கமில்லாத ஒவ்வொரு
   மனிதனும் களைந்து எளியப்பட வேண்டிய களைகளைப்
   போன்றவனேயாவான்.

  காலத்தை வீணாய் கழிக்கும் ஒவ்வொரு மனிதனும்
  ஞாலத்திற்கு ஒரு நச்சுப் பொருள்.

  ஒரு தேசத்திற்கு பெரிய துன்பம் நேர்வது எப்போது என்றால்
  கெட்டவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று நினைக்கும்
  போதுதான்.
- வெ.

புது வெளிச்சம்

ᗍ 21