பக்கம்:புது வெளிச்சம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என் அருமை நண்பனே! கவனித்து கேள். வாலும் கிண்ணமும் சேர்த்து முதலில் நம் வீட்டு உபயோகத்துகென அமைத்த கருவி ஒன்று 'வால்கிண்ணம்' எனப்பெயர் பெற்றிருந்தது. தற்காலத்தில் அதன் பெயர் அது வரக்கணம் என்று திரிந்துள்ளது - அதே மாதிரியாய் 'அரிய மருந்தன்ன பிள்ளை' எனும் சொற்றொடர் அருமந்தப் பிள்ளையெனத் திரிந்து விட்டதை போலவே சுர்வர்க்கம் எனும் சொற்றொடர், தன் இரண்டாமெழுத்தான இடையின உயிர்மெய்யெழுத்து ஒன்று மக்கள் உச்சரிப்பிலிருந்து அறவே கழற்றிக்கொண்டுவிட்டது. நின்றநிலையில் அது சுவர்க்கமாயிற்று. நரவர்க்கம் எனும் சொற்றொடர் இடையிலிருந்த (வர்க்) வகர உயிர்மெயும் கூட இரண்டு ஒன்றுகளும் கழன்று போய் முதலும் இறுதியுமான நரவர்க்கம் = நரகம் என வழங்கி வருகிறது.

இவை ஏற்கனவே சூழ்ச்சிகாரர்களால் இடப்பெயராய்ச் சுவர்க்கம், நரகமெனக்கூறிக் சுவர்க்கத்தை இந்திரனும், நரகத்தை எமதர்மராஜனும் ஆண்டு வருவதாகக் கதைகட்டி மக்களைக் குருடாக்கி விட்டனர் என்பதுதான் உண்மை.

நாம் பராதினராகவே இன்றும் உள்ளோம். சுயமாகச் சிந்திக்கும் பழக்கமே நம்மிடம் இல்லாதிருக்கிறது. எனவே, நான் சொல்கிறேன். சிந்திக்கத் தெரியாத ஒவ்வொரு மனிதனும் சிறுமைக்குள்ளாகிறான். என்று.


❖ ஆசையுள்ள பணக்காரனை விட ஆசையற்ற ஏழை
   அமைதியாக வாழ்கிறான்.
- ஏங்.எம்.

புது வெளிச்சம்

35