பக்கம்:புது வெளிச்சம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறி ' வெனக் குறள் கூற்றினை நாம் மறந்து விடக் கூடாதல்லவா?

கி.மு.நான்காம்நூற்றாண்டுக் காலகட்டத்தில்தான் சாணக்கியன் என்பவர் 'அர்த்த சாத்திரம்' எனும் நூல் இயற்றினார். என்று அறிஞர் அறிவித்துள்ளார்.

அந்த அர்த்த சாத்திரம் ஐந்தாவது ஆதிகாணம் 2-ம் அத்தியாயத்தில் கோஸாபிசம்கரணம் - 336-ம் பக்கம் உள்ள செய்தியைக் கன்னடத்திலிருந்து இங்கு தமிழில் பெயர்க்கப் படுகிறதைச் சற்று உற்றுக் கேட்டு யோசனைசெய்துபார்.

'தேவாலயங்களின் முக்கிய அதிகாரியாயிருப்பவர் மலைகளிலும், தேசத்திலும் உள்ள கோவில்களில் அன்றுவரை சேர்ந்திருக்கும் செல்வம் அனைத்தும், பகைவர்கள் காரணமாக ஒர் இடத்திற்குத் திரட்டிக் கொண்டுவந்து அரசனிடம் ஒப்படைக்க வேண்டும்'. அதுவுமன்றி இரவு நேரத்தில் மக்கள் போக்குவரவற்ற பிரசித்தமான எழில்மிக்க இடங்களில், சிவலிங்கத்தை நிர்மானித்து, இது தானகாவே பூமியிலிருந்து உதித்த சுயம்புலிங்கம் என்று பிரசாரம் செய்து, மேடைகட்டி, திருவிழாக்களை ஏற்படுத்தி மக்கள் திரண்டு வந்து சேரும்படி செய்து, கடவுள் பெயரால், பணம் சேகரிக்கவும் வேண்டும்!.

'பருவமல்லாத காலத்தில் ஏதாவது ஒரு மரத்தில் செயற்கை முறையில் பூக்களை உண்டுபண்ணிக்காட்டி, இது தெய்வத்தின் மகத்துவம் என்று பிரசாரம் செய்து, த.வி.சி.வேசம் போட்டுக் கொண்டுள்ள ஒற்றறிநிபுணன் ஒருவன், சுடுகாட்டின் கண் உள்ள ஒரு மரத்தில் இராச்சதன் வேசம் போட்டுக்கொண்டு எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனைப் பலிகொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊரிலுள்ள அனைவரையும் சர்வ நாசம் செய்திடுவேன்' என்று க்ரூரமான குரலில் பிரசாரம் செய்து அதை நம்பி பலிகொடுக்க வந்த மனிதனுக்குப் பதிலாகப் பொது மக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை வசூல்செய்து அரசனிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும்.

புது வெளிச்சம்

39