பக்கம்:புது வெளிச்சம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேவாலயமதில் சுவற்றிலோ, புற்றுகளிலோ வங்குகளில் இருந்து வெளியே வந்த நாகபாம்பைப் பார்த்தால், மந்திரதந்திரத்தினால், அல்லது மருந்தினால், அதன் போக்கைத் தடுத்து இருக்கச் செய்து, 'இது தெய்வத்தின் பிராயத்தினால் வெளியே வந்துள்ளது', என்று விரும்புகின்றவர்களுக்கு அதனைக் காண்பிக்க வேண்டும். சிரத்தை காட்டாது அதைக் கிண்டல் கேலி செய்கின்றவர்களுக்குக் குடிதண்ணிலோ, மேலே தெளிப்பதிலோ நினைவு நீங்கும் அளவு விசத்தை உபயோகப்படுத்தி, "நாக தெய்வத்தின் கோபத்தினால் நினைவு தப்பியுள்ளது” என்று செய்திபரப்பிட வேண்டும். இதுவுமின்றி இரவு வேளையிலும், அரநிந்தனை, தெய்வநிந்தனை செய்கின்றவர்களை விசப்பாம்பினைக் கொண்டு கடிக்கவைத்துக் கொன்று இவையெல்லாம் தெய்வ தண்டனை' என்று கூற வேண்டும். தக்க மருந்துகளைக் கொடுத்து விசம் நீக்கி அவர்களிடமிருந்து கூடிய அளவு பெருந்தொகையான பணம் பெற்றுக் கொண்டுவந்து அரசரிடம் சேர்ப்பிக்கவேண்டும்.

இவை ஒரே பாராவில் அடங்கியுள்ள விசயங்கள் மட்டும். மேற்கொண்டு எழுதினால் என்னையே, இன்றுள்ள சாணக்கிய சந்ததிகள் இப்படியே செய்து தீர்த்துக் கட்டிவிடுவார்களோ என்று என்னையும் எண்ணச் செய்கிறது.

எனினும் நான். அஞ்சமாட்டேன். உண்மைகளைக் கண்டு வெளிப்படுத்தவதில்தான் நான் முழு மனிதனாகிறேன். அவர் கையால் கொல்லப்பட்டால் அமரனும் ஆகிறேன். இது நிற்க.

இந்தச் சாணக்கிய சந்ததிகள் மக்களை பேதோபாயத்தால் இவ்வாறு சர்வநாசம் செய்து வருவதனைக் கண்டு உளம் வருந்தி நல்லோர் உண்மைகளை உள்ளதுள்ளவாறு தமிழ் மக்களுக்கு அக்காலத்திலேயே தெள்ளத்தெளிவாக செப்பித்தேற்று வித்துள்ளனர்.

‘தெய்வம் உள்ளது'; ஆனால் அதை நாம் உள்ளதுள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்; என உண்மையையே உரைத்துள்ளனர். திருமூலர் தெரிவிக்கின்றார்.

சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்;

சிந்தை தெளியத் தெரியவல் லார்கட்குச்

40

கவிஞர் வெள்ளியங்காட்டான்