பக்கம்:புது வெளிச்சம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த ஆதி காலாடி சங்கராச்சாரி, உபநிசத்துகளைக் கற்றவரில்லரெனில் நாம் இதைப்பற்றி தர்க்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் உபநிசத்துகளை கற்றறிந்திருந்தும் ஏன் அதை மறைத்தார்? ஏன் இதைச் செய்தார்? உபநிசத்துக்களைப் படித்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுமாறு ஏன் செய்யாது விட்டார்?

உபநிசத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தியது “இந்த தெய்வங்களையா? அவர் காணப்படாமல் காண்பவர் கேட்கப்படாமல் கேட்பவர். அவரைக் காட்டிலும் வேறாகக் காண்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாகக் கேட்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி அழிவற்றவர். மற்ற எல்லாம் அழிவுள்ளது. என்பதை ஏன் ஆச்சாரியார் மக்களுக்கு காட்டாமல் மறைத்தார்; இன்னும் மறைத்துக் கொண்டே உள்ளனர் இன்றுள்ள ஆச்சாரிகளும்?

அவர்கள் மறையோர்கள், உள்ளதை மறைத்து உலகத்தை அதோகதிக்கு இன்றும் அழைத்துச் செல்லுகின்றனர். தொலையட்டும். தமிழ் படித்து பட்டம் பல பெற்ற புலவர் பெருமக்கள் பற்பலர் உள்ள இந்த துர்ப்பாக்கியத்துக்குள்ளான நாட்டில் ஆரியரால் மறைத்து வைத்த அந்தப் பேருண்மையைத் நமது திருமூலர் வெளிப்படுத்தியுள்ளதை இனிமேலாவது அறிந்து அனைவர்க்கும் விளக்கமாக வினயமாகக் கேட்டுக் கொண்டு இங்கே குறிப்பிடுகிறேன் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் இனியேனும் அறிய;

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே

உள்ளத்துக்குப் புறம்பாக எந்தவொரு தெய்வமும் இல்லை என்பதற்கு இதுவே போதும். எனவே ஒழிக உருவ வழிபாடு என்று கூறி இதை முடிக்கிறேன்.

புது வெளிச்சம்

49