பக்கம்:புது வெளிச்சம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடாதென்றால் நாம் தியாகம் எனும் இந்தச் சொல்லின் பொருள் புரிந்தொழுகுபவர்களாக இருந்தே தீரவேண்டும்.

உயிரினங்களில் ஐந்து வகைகள் உள்ளன என்றும் அவற்றில் ஒரறிவுயிர் தாவரம் என்றும் நமக்குத் தெளிவித்துள்ளனர் நமது முன்னோர். மேலும் நாம் இத்தாவர இனத்தைச் சற்று கூர்ந்தாராய்ந்து பார்த்தால், மரஇனம், செடியினம், கொடியினம், புல்லினம், பூண்டினமென ஐந்தினமாக்கிவிடலாம். இவற்றை நிலைத் திணையுயிர்கள் என்றும் ஏற்கனவே பெயர் கொண்டுள்ளன கூறப்பட்ட ஒவ்வொரு இனத்திலும் நல்லன, அல்லன என இருவகையுள்ளன.

ஐயறிவுள்ள மனிதனுக்கு இந்தத் தாவரவர்க்கம் தான் முதல் தெய்வம் என்றும் கூறப்படுகிறது. அன்னமயம் பிரம்மம் என்று உபநிசத்துக்களில் இதனைப் பற்றித் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இயங்கு தினையாயுள்ள மனிதனுட்பட அனைத்து சீவராசிகளுக்கும் முதலில் தோன்றி நிலவுலகில் நம்மை வளர்த்து வாழவைக்கும் தாய் போன்றன தாவரம். சிந்தித்துப் பார்த்தால் தம்மை முழுமையாக மற்ற சீவராசிகளுக்கு தியாகம் செய்வதற்காகவே இவை தம்மைத் தாமே ஈன்றுகொண்டு, மனிதனின் - மற்ற சீவராசிகளின் கைமாறு கருதாது வாழ்வதை நாம் காணுகின்றோமென்று. சிந்தித்துப் பார்க்கின்றோமா? இல்லை. தியாகம் எனும் சொல்லுக்கு முழுப்பொருள் இத்தாவர வர்க்கம்தான் என்பதும் சரியானதேயாம்.

ஞானிகளைப் போல் வேடம்பூண்டு கொண்டுவாழும் ஆசாட பூதிகளின் இருதயத்தில் தியாகம் எனும் சொல்லின் வாடையும் கூட இருக்க இயலாது. தியாகம் ஆனந்த வடிவமானது. ஆசாடபூதிகள் குரோத உணர்சியுடையவர்கள்.

தேன், நெய், சருக்கரை தேங்காய், பழம் எனும் சொற்கள் வேறு; சொற்கள் குறிக்கும் பொருள்களும் வேறு என்று புரிந்து கொள்ளவேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதது போல, கோயில் தெய்வம் குணத்துக்கு உதவாது. குணம் அல்லது அறிவுதான் தெய்வம் எனப்படுவது.

52

கவிஞர் வெள்ளியங்காட்டான்