'சந்தியம், ஞானம், அனந்தம், பிரம்மம்' எனும் உபநிசத்து மேலும் விளக்குகிறது, அன்னமயம், பிரம்மம், பிராணமயம், பியம்மம், மனோமயம் பிரம்மம், விஞ்ஞானமயம் பிரம்மம், ஆாந்தமயம், பிரம்மம் என்று உடல், உயிர் உள்ளம் அடுத்துப் பொய்யை நீக்கி மெய்யை மேற்கொண்டொழுகல் விஞ்ஞானம், விஞ்ஞானம் அல்லது சத்தியத்தைப் பரவலாக ஆக்கிப் பங்கிட்டுக் கொள்ளும் அரும் தியாகமே, அனந்தம், அது ஆனந்தமயமானது.
ஆகவே தான், உபநிசத்து திட்டவட்டமாக இந்தத் தியாகம் எனும் சொல்லைப் பற்றி இவ்வாறு கூறிற்று
'நாஸ்தி தியாக சமன் சுகம்'. இதன் பொருள் தியாகத்தில் உள்ள சுகத்துக் கொப்பிட்டுச்சொல்ல வேறு எந்த ஒரு சுகமும் உலகில் இல்லை, என்று
வெறும் பாவனை வேண்டப்படுவதல்லாத; பாவிகளால் சுகம் பெற முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளத்தில் சத்தியத்தை வைத்து ஒழுக்கத்தில் நீதிக்கு முக்கிய இடமளித்து வாழும் போது தெய்வீகத்தை நாம் அறிந்தடைந்தவர்களாகிறோம். தியாக மூர்த்திகளாகிறோம், மற்ற மனிதர்களால் வெல்லப்படாதவர்களாகவும் ஆனந்தமுள்ளவர்களாகவும் ஆகிவிடுகிறோம்.
எனவே தியாகம் வாழ்க சத்தியம் ஓங்குக!
❖ ஆழ்ந்த சிந்தனை, குறைந்த பேச்சு இதுவே வெற்றிக்கு வழி.
❖ அடக்கத்தோடு உண்மை ஆலோசிக்கப்படும்போது, ஆத்திரத்தோடுபொய்மை கூச்சலிடத் தொடங்கும்.
❖'சமுதாயம்' என்னும் பயிரில் வாழும், ஒழுக்கமில்லாத ஒவ்வொரு மனிதனும், களை எடுக்கப்படவேண்டியவனே.
❖ உயிர் வாழ்பவனின் சோம்பல் ஒரு சவக்கிடங்கு.
புது வெளிச்சம்
➢53