இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
|
புனர் செனனம்
நம்முடைய மதத்தின் பெயர் 'இந்துமதம்' எனப்படுகிறது. இந்து மதத்தினை மேற்கொண்டு வாழ்பவர்களுக்குப் புனர் செனனம் - அதாவது மறுபிறப்பு உண்டு என்று வற்புறுத்தி நம்பும்படி செய்துகொண்டே வருகின்றனர் இந்து மதபோதகர்கள்.
சிந்திக்கத் தெரியாத ஒருவன், காதில் விழுந்த சொல்லை நம்பி நடந்து தன்னைப் போன்றுள்ள மற்றவர்களையும் நம்பும்படி செய்கிறான். தன் உற்றார் உறவினரையும் இதே வழியில் நம்பி நடக்கவும் செய்து விடுகிறான்.
சோசலிசம், கம்யூனிசம் போன்று இந்தப்புனர் செனனக்கோட்பாடு இன்று நேற்றைய புதிய தொன்றன்று. உபநிசத்துக் காலத்திலிருந்தே இதுவும்
54 <
கவிஞர் வெள்ளியங்காட்டான்