இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
|
கர்ம சித்தாந்தம்
புனர் செனனத்தைப் போலவே, கர்மசித்தாந்தம் எனும் இந்தத் தலைப்பும் படுசிக்கலானது. அர்த்த பேதம் செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களாகப் பிறந்து, இந்துமதம் எனும் பெயரில் கொள்கையில்லாது வாழும் கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கர்ம சித்தாந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் தொல்லைப்பட்டுக் கொண்டுள்ளனர்.
கருமம் எனின், காரியம், கிரியை, செய்கை என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. சித்தாந்தம் எனின், தருக்க முடிவு, நிச்சயமானது எனும் பொருளில் வழங்குவது. 'வினைப்பயன்' என்பது சரியான பொருள் என நாம் எடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது.
60 <
கவிஞர் வெள்ளியங்காட்டான்