பக்கம்:புது வெளிச்சம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14




அதிதி தேவோ பவ


திராவிட மக்களாகிய நாம், பாவிகளல்லாவிடிலும் புண்ணியம் செய்தவர்களன்று. ஆம், நாம் புண்ணியம் செய்திருந்தால் நமக்கு ஆதி சங்கராச்சாரி இன்னும் மேலான நல்ல தெய்வங்களைக் கொடுத்திருப்பார் திராவிட மக்கள் இவ்வாறு மொழி பேதம், சாதிபேதம், சாமிபேதம், கொள்கைபேதம், செல்வபேதம், கல்விபேதம் போன்ற பிரிவுகளால் சில்லாந்தட்டிப் போய் இந்த அளவு பலவீனராய் இருக்க மாட்டோம்.

தம்முடைய இனமக்களுக்கென மறைந்து வைத்துக் கொண்ட தெய்வம்தான் உண்மையான தெய்வம். அது பிறப்பில்லாதது. பிராணன்களிடையில் விஞ்ஞானமயமாயிருப்பது. இருதய ஆகாசத்தில் உறைவது, அனைத்தையும் தன் வசம் கொண்டது. அனைத்தையும் ஆள்வது அனைத்துக்கும் அதிபதி அந்தத் தெய்வமே சர்வேசுவரன்.

புது வெளிச்சம்

65