பக்கம்:புது வெளிச்சம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நமது உடன்பிறப்புகள் காமம், வெகுளி, மயக்கம், பொய், வஞ்சனை, பேராசை, பொறாமை, கோள், குரோதம், சச்சரவு, சண்டை, வழக்கு, போலீசு, கோர்ட்டு, வக்கீல், விசாரணை இன்னும் என்னவெல்லாமோ தீராத நரக வேதனை, வறுமை நமது நிரந்தரமான பிறப்புரிமை. இது நம்மை விட்டு என்றும் நீங்கவே நீங்காது, காவி உடுத்திக்கொண்டு, இரந்து வயிறு வளர்த்தினால் என்ன குறைந்து விடும். யார் போகும் போது எதைக் கொண்டு போகிறார்கள் இது நமது கேள்வி.

சைவ சமயம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ள திருமுறைகளில் திருமூலர் திருமந்திரமும் ஒன்று. அதை சைவ சமயத்தலைவர்கள், படித்துப் பார்த்திராவிடினும் கையால் தொட்டும் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள் என்று நான் ஐயுறுகிறேன். மூலர் உரைத்த முப்பது மந்திரங்களில் ஒருமந்திரம் போதுமே இந்த விக்கிர ஆராதனை எனும் அறியாமை நோய் தீர்க்க: பதி, பசு, பாசம் எனும் மூன்றும் இன்னவெனவும், இவ்வாரெனவும், அதை அடையும் முறையும் விளக்கமாக இருந்தும் என் பசுவாகிய உயிர் பாசத்தை பிய்த்தெறிந்து இன்னும் பதியையடையாமல் கூக்குரலிட்டுக் கொண்டுள்ளனர். என் மக்களை மந்தையாகக் கூடவைத்து மேலும் மேலும் பராதீனர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்; திருமந்திரம் படித்துப் புரிந்து கொள்ளாதவன் இனித் திருக்கயிலாயத்துக்கு எந்த வழியில் சென்று சிவன் பக்தனாவது?

திருமந்திரத்தில், திருமூலர் இவர்களைப் பார்த்து விளிக்கிறார்; "வானில் ஈசனைத் தேடும் மதியிலிகாள்” என்று. தேனும், இனிமையும் சிவப்போ கறுப்போ? என்று வினவுகிறார். தேனும், இனிமையும் சேர்ந்திரண்டற்றுள்ளதுபோல்', என - அதாவது ஈசனும் நீயும் வேறுவேறல்ல தேனும் இனிமையும் வெவ்வேறாகாதது போல என்று தெளிவிக்கிறார். 'ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே. உன்னுடைய உடலுக்குள்ளேயே நீ வானில் தேடும் ஈசன் ஒளிந்திருக்கிறான் என்கிறாரோ ஏன் இந்த அடிகளார்கள் இதையறியாமல் நாட்டில் அறியாமை இருளைப் பரப்புகிறார்கள்.

புது வெளிச்சம்

81