பக்கம்:புது வெளிச்சம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



பிரார்த்தனை


ன் வாழ்நாளில், துளியும் முக்கியத்துவம் அற்றதென ஒதுக்கிவிட்ட ஒரு சொல்தான் இந்தப் பிரார்த்தனை எனும் சொல். ஆனால் உலகின் கண் வாழும் கோடானகோடி மக்கள் இந்தப் பிரார்த்தனை எனும் சொல்லுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் கொண்டொழுகுவது நாடொறும் என் கண்ணால் நான் நேரில் காண்கிறேன்.

பிரார்த்தனை அல்லது வேண்டுதல் எனும் சொல்லை ஒரு பொருளற்ற சொல் எனும் நேரத்தில், உலகம் அது ஒருபொருள் பொதிந்த அதிமுக்கியத்துவமுள்ள சொல்லாகக் கருதுகிறது ஏன்? ஒன்று, என் கருத்து தவறாதல் வேண்டும், அன்றேல் அவர்கள் கருத்து தவறாதல் வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இரண்டும் சரி எனச் சொல்ல இயலாது.

புது வெளிச்சம்

87