108 - புை தயலும்
விலைக்கு விற்றாவது வாங்கிச் கொள்ளலாம். ஒப்புரவை அறியாதவன் பிணம் -என்றுள்ளார். இவை கடுமைதாம்.
இக்கடுமைக்கு மாற்று :
'உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்' (480) என்பதில் உள்ளது. மலை போன்ற செல்வமும் அளவறியாது ஒப்புரவாற்றினால் விரைந்து அழிந்து விடும் எனவே, அளவறிக’ என்பது மாற்று அன்றோ?
இரவச்சம்' என்றொரு அதிகாரம்வைத்து அதற்குமுன்னரே "இரவு என்றொரு அதிகாரம் வைத்தது மாற்றைச் சொல்வி ஆற்றச் சொல்வதாகும்.
ஆவிற்கு நீர் கொடு என்று கேட்பதே நாவித்து தாழ்வு’ என்பது கடுமைதான். ஆனால்,
'இல்லை என்று கரவாமல் கொடுப்பவரைப் பார்த்துக் 'கொடு’ என்று இரக்கலாம்? என்று முன்னமே மாற்று அமைத்துள்ளார். அப்படியே அவன் இல்லையென்று சொன்னாலும் பழி நம்மேல் அன்று என்பதை,
கரப்பின் அவர் பழி;
தம் பழி அன்று” -என்றது ஒரு பெரும் ஆறுதலைத்தரும் மாற்று வழியாது.
ஓரிடத்தில் கடுமை காட்டி மற்றோரிடத்தில் மாற்று இது மட்டுமன்று, ஒரு குறட்பாவிலேயே இரண்டை. வைத்தார். -
ஒருவன் தகாத செயலைச் செய்துவிட்டான். அவனே அதனை நினைந்து பார்க்கின்றான். :வின்- இப்படிச் செய்து விட்டோமே, என்று தனக்குத் தானே இரங்குகின்றான். திருவள்ளுவர் குரல் கொடுக்கின்றார்; .