பக்கம்:புதையலும் பேழையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பொருளாய்வைப் பேழை என்றும் உருவகப் படுத்தியுள்ளேன்.

மொழிப்பயனை அறியவும், பண்புள்ள மரபு வாழ்வை உணரவும் இப் புதையலும் பேழையும்' பயன்படவேண்டும் என்பது எனது நோக்கம்.

டாக்டர் வா. செ. குழந்தைசாமி பி. ஈ. எம். டெக்., டி. எசு. எசு., பிஎச். டி., டி. லிட், அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை இந்நூற்கு மணிமுடி எனலாம். டாக்டர், பொறியியற் பேரறிஞர் மட்டு மல்லர், மொழியியலிலும் மனம்பதித்த வல்லுநர். செம்மை வாய்ந்த கவிஞர், தேர்ந்த திறமும், தெளிந்த நெறியும் கொண்ட அவர்களது அணிந்துரையைத் திறனாய்வாகவே காண்கின்றேன். இந்நூலின் தகவை அணிந்துரை தெளிவுபடுத்துகின்றது. அவர்களது பெருந்தகவை எண்ணி நெஞ்சம் நிறைந்த நன்றி படைக்கின்றேன்.

இப்பதிப்பிற்கு உதவிய தமிழ் நாட்டரசையும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தாரையும், என்பால் பேரன்பு கொண்டு உதவிய நண்பர்களையும் நெஞ்சில் நிறுத்தி நன்றி கூறுகின்றேன்.

படிப்போர்க்கும், பயில்வோர்க்கும், சுவைப் போர்க்கும் பயன்கொள்வோர்க்கும், உரைத்து மாற்று காண்போர்க்கும் என் நன்றி கலந்த வாழ்த்தை முன்கூட்டி வைக்கின்றேன்.

வணங்கி அமைகின்றேன்.

கோவை, இளஞ்சேரன்.