பக்கம்:புதையலும் பேழையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி,

கருத்தாழமும் சொல்லழகும்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழில் வழி பாடு என உரிமைக்குரல் எழுப்பினார். தமிழில் வழிபாடா? மரபில்லையே' என்றனர் இனம் புரியாதார்.

'தமிழ்வழி வழிபாட்டிற்கு மரபுகாட்டி எழுதுக' என்றார் அடிகளார். எழுதினேன்; வெளிவந்தது. பார்த்துப் படித்த புலவர் ஒருவர் எழுதினார்:

'அக்டோபர் முதல் தேதியத் தமிழரசு இதழில் வெளிவந்துள்ள 'இனிமைத் தமிழில் இறை வழிபாடு' என்ற கட்டுரை கருத்தாழமும் சொல்லழகும் கொண்டு மிளிர்கின்றது. பல்கலைக் கழக மாணவர்களின் ஆராய்ச்சிப் பிரிவிற்குப் பாடமாக வைக்கத் தகுதி படைத்தது இக்கட்டுரை என்றால் அது மிகையாகாது. கட்டுரையாசிரியருக்கு எம் அளவற்ற பாராட்டுகள்.” -

-புலவர் மாணிக்கனார், திருச்சி. ('பார்த்தோம் படித்தோம் பகுதி தமிழரசு இதழ் 1-11-1971)

வெளியீடு : * *

  • - - 'தமிழரசு" தி. ஆ. 2002-புரட்டாசி-15 : 1–10–1971. மறு வெளியீடு :

"சுதந்திரன் கொழும்பு இலங்கை. தி. ஆ. 2002-ஐப்பசி-28; கார்-5. 14, 21–11–1971,