பேழையும் 38
செவியை நிலமாகவும், சொல்லை விதையாகவும், பயன் நிறைவேறுதலைப் பயிர்க் கதிராகவும் உருவகம் செய்தனர் புலவோர்.
"வள்ளல்களது செவிகளில் பொருள் விளங்கும் சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசைப் பெற்று நிறைவேற்றிக் கொள்ளும் உரம்பாய்ந்த நெஞ்சை யுடையோர் பரிசிலர்' -என்றார் அவ்வைப் பெருமாட்டியார். பெருஞ்சித்திரனாரும்,
'பொய் சொல்லுவதை அறியாத அறிஞனது செவி யிடத்து விதைத்த சொல்லாலான பாடல் பயிராக விளைந்தது'2 என்றார். - -
புலவன் உழவன் ஆகிறான்.
சொற்களை வழங்குதலை நெற்பயிர்த் தொழிலாகக் கண்டனர். கண்டோர், சொல்லை விளைக்கும் புலவனை உழவ னாகக் கண்டனர். திருவள்ளுவப் பெருந்தகை சொல் ஏர் உழவர்'3 -என்றார். சொல் ஏர் ஆகியது; புலவன் உழவன் ஆனான்.
இதற்குப் பொருத்தமாக அறிவை-புலனை ஏராக வைத்துப் புலன் உழுது உண்மார்' என்றார் கோவூர்கிழார்.
உழவுத் தொழில் ஓர் சொல்லாடல்.
இவற்றையெல்லாம் ஒரு சேர நோக்கி ஒரு காட்சி ஆக்கு கின்றார் கலித்தொகை ஆசிரியர்:
1 வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தம் இப் பரிசில் வாழ்க்கை' புறம் : 206 : 2-4
2 'பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் -
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' -புறம் : 287 : 4, 5. 3 'வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ள ற்க;
சொல்லேர் உழவர் பகை' --குறள் : 872. 4 'இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் -
தமது பகுத்துண்ணும் தண்ணிமுல் வாழ்நர்." -புறம்:46:18, 4
பே, 3