பக்கம்:புதையலும் பேழையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த நாள்.

கோலத்தின் மூலம்

சேலத்து இருப்பு செருமனிக்குப் போய் ஒலிபெருக்கியாக உருப்பெற்று, மெருகேறிப் பள என்று சேலத்திற்கே மீளும். அதன் கோலத்தைக் காணும் சேலத்தார் அதற்குள் சேலம் இருப்பதை அறியார். அக்கோலத்தின் மூலம், சேலம் என்பதை நினையார். х

குருதிக் கொதிப்பு நோயைப் போக்க அமெரிக்க நாட்டி விருந்து வந்திறங்கிய செர்ப்பசில்: மருந்தில் சருப்பகந்தி’ என்னும் பாம்பு நாறி யாம் நம்நாட்டு மூலிகை இருப்பதை நாம் நினைந்தும் பார்ப்பதில்லை.

இவைபோன்றே, நம்நாட்டுப் பொருள்கள் பல மேலை நாடுகளுக்குச் சென்று உருமாறி வந்தாலும் கரு மாறாமல் உள்ளன. அவற்றை நாம் மேலைநாட்டுப் பொருள்களாகவே கருதுகின்றோம், மேலை நாட்டுப் பொருள் என்பதால் பேரார் வமுடன் பெற்று அந்நாடுகளின் பெருமையைப் பேசிப் பேசி மகிழ்கின்றோம். நான் பயன்படுத்துவது தாழ்வான நம்நாட்டுச் சரக்கு அன்று: உயர்ந்த மேல்நாட்டுப் பொருள்-என்று கூறித் தனி மதிப்பு வந்துவிட்டதாகக் களிக்கின்றோம்.