பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலையில்லாத சித்தத்தையுடையவரும், கண்மையாக கருபத்தை அறியாதவரும், மனத்தின் சாந்தி குமும்பியவரும் பூரணஞானத்தைப் பெறமுடியாது.

    • ★★

பகைவன் பகைவ க்குச் செய்யும் தீமையைப் பார்க்கிறு , நிந்திப்பவன் எதிரிக்குச செய்யும் தீமையைப் பார்க்கினும், தவறான வழியில் திரும்பிய சித்தம் அதிகக் கேடு விளைவிக்கும். '

        • ★★


தாயும்,தந்தையும், சுற்றத்தாரும் நமக்குச் செய்யும் உதவியைப் பார்க்கினும், நல்ல வழியில் திரும்பிய சித்தம் அதிக உதவியளிக்கும். '

        • ★★


கலங்கிய சிந்தனைகளும், உணர்ச்சி வெறிகளும், இன்பத்தில் தேட்டமும் உள்ள மனிதனுக்கு அவா வளர்ந்து கொண்டேயிருக்கும்; அவன் தன் கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான். '

        • ★★


சிந்தனைகளைச் சாந்தப்படுத்துவதில் நாட்டமுள்ளவன், எப்பொழுதும் விழிப்புள்ளவன். (உலகில்) இன்பமில்லை என்பதில் கருத்தைச் செலுத்துபவன், மாரனின் மரணத் தளையிலிருந்து விடுபடுவான் - அதை முறித்தெறிவான். '

        • ★★


நேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிந்தையை ஒருநிலைப்படுத்தும் சமாதியால் (தியானத்தால்) விளையும் பயன் பெரிது, மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க் கொண்டு அடையும் ஞானத்தால் விளையும் பயன் பெரிது, மகத்தானது. ஞானத்தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசைகளிலிருந்தும், நான் என்ற அகங்காரத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றது. *



மாரன் - சாத்தனைப் போன்ற சீல விரோதி: அறத்தி பகவன்


ப.ராமஸ்வாமி \ 18