பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறரைப் -ழிக்கின்ற செய்திகளைக் கற்பனை செய்ய வேண்டாம், அவைகளைப் பரப்பவும் வேண்டாம். கூட வாழும் மக்களைப் பற்றிக் இறை கூற வேண்டாம். அவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டு சங்கள், அவர்களுடைய பகைவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கத்தக்க முறையில் நடந்து கொள்ளுங்கள். ஆணையிட்டுப் பேசவேண்டாம், நாகரிகமாகவும், நயம்படவும் பேசவும். பயனில்ல ாதவற்றைப் பேசிப் பொழுதை வீணாக்க வேண்டாம், குறித்த விஷயத்தைப் பற்றிப் பேசுக, அல்லது மெளனமா யிருங்கள். பேராசைப் பட வேண்டாம், மற்ற மக்களுடைய இன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியடையுங்கள். கொண்டிருக்க வேண்டாம்: உயிருள்ள ஐந்துக்கள் அனைத்தையும் அன்பாவி அனைத்துக்கொள்ளுங்கள். 10. உள்ளத்திலுள்ள அறியாமையை அகற்றுக. உண்மையை அறிய ஆவல் கொள்க - முக்கியமாக எந்த விஷயத்தில் மெய்யை அறிய வேண்டுமோ அதில் கவனமாக இருங்கள் இல்லாவிடில் நீங்கள் அவநம்பிக்கைஅடைய நேரும். அல்லது தவறுகள் செய்ய நேரும். அவநம்பிக்கை உங்களுக்கு அலட்சிய பாவத்தை உண்டாக்கி விடும். தவறுகள் நீங்கள் வழி தவறிச் செல்லும்படி செய்து விடுபவை: இவைகளால் நித்தியமான வாழ்வுக்குரிய உன்னதமான மார்க்கத்தை நீங்கள் கண்டுகொள்ள முடியாமற். போகும். ' —- 30 | புத்தரின் போகை