பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. கோபம் வழி தவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றை(க் கையில்) வைத்திருப்பவர்களே. '

வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். நா அடக்கத்தில் பழக வேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணிவருக.

மனத்தினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மனஅடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வருக. | 34 புத்தரின் போதனைகள்