பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. தானம் தானம் செய்பவன் உள்ளக்களிப்புடன் அமைதி பெறுகிறான். அவனுக்குக் கவலையுமில்லை, சஞ்சலமுமில்லை. "

செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தையே மூட்டை கட்டிர் சேர்த்து வைத்து, முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான். "

நெருப்புப் பற்றிய பொக்கிஷத்தில் மிஞ்சியிருப்பவைகளை அள்ளியெடுப்பது போல், பிறருக்குச் செல்வத்தை அள்ளிக்கொடுக்க வேண்டும். "

செல்வம் தானாகத் தீமை பயப்பதில்லை; அதிலே பற்று வைத்து, அதனுடன் ஒட்டிக் கொள்வதுதான் கூடாது பற்றுக்கொண்டு உள்ளத்தை விஷமாக்குவதைவி அவன் உதறிவிடுவதே நலம்! "

கருமிகளே தேவர் உலகை நண்ணுவதில்லை; மூடர்களே ஈகையைப் போற்றுவதில்லை. ஆனால் ஞானி, ஈகையில் இன்புற்று, (அதனால்) மறு உலகிலும் கம ைறொன். '

சகல தானங்களையும் தரும தானமே வெல்கிறது. சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும இன்பம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது. '

  • தி:

வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை ஆசை: ஆதலால் ஆசையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அவிக்கும்.

    • பிக்குகளே தானங்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன: பொருள்களை அளித்தல் (திரவிய தானம்), அறத்தினை அளித்தல் (தரும ஞானம்). இவ்விரண்டு தானங்களிலும் தரும தானமே சிறந்தது. "
நியாயமான முறையில் செல்வத்தைச் சேர்த்தும், தாராளமாகத் தன் செல்வத்திலிருந்து தானம் செய்தும் வருபவன் நிறையப் புண்ணியத்தைத் தேடிக்கொள்கிறான். '

ப. ராமஸ்வாமி 37