பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. உபாஸ்கர்கள் ஒருவன் புறத்திலே நகைகள் அணிந்திருந்தாலும், அவன் மனம், புலன்களை வெற்றி கொண்டிருக்க முடியும். வெளித்தோற்றம் தரும வாழ்க்கை அன்று. அது உள்ளத்தைத் தீண்டாது. சிரமணன் சிவர ஆடையைப் புனைந்துகொண்டே, உலகப் பற்றுக்களில் ஆழ்ந்திருக்கவும் முடியும். '

  • *

ஏகாந்தமான வனங்களிலே தங்கியிருந்தும், ஒருவன் வையகத்தின் ஆடம்பரங்களை விரும்பினால், அவன் உலகப் பற்றில் ஆழ்ந்தவனாவான்; உலகத்தாரைப் போல உடைகள் அணிந்த ஒருவன், தன் இதயத்தை வான மண்டலத்திலே பறக்கவிட்டு, உன்னதமான சிந்தனைகளை மேற்கொள்ளவும் கூடும். '

துறவியும் இல்வாழ்வோனும், நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டால் இருவர்க்குள்ளும் பேதமேயில்லை. ' Wr of இல்வாழ்வோர்களே சிறந்த ஒழுக்கத்தைப் பேணாத ஒருவன் அடையும் நஷ்டங்கள் ஐந்து வகையானவை. முதலாவதாக, ஒழுக்கமில்லாததால், அவன் மடிமையில் ஆழ்ந்து மிகுந்த வறுமையை அடைகிறான்; அடுத்தாற்போல், அவனைப் பற்றிய இகழ்ச்சி எங்கும் பரவி விடுகின்றது; மூன்றாவதாக, அவன் பிராமணர்கள், கூத்திரியர்கள், குடும்பத் தலைவர்கள், சிரமணர்கள் ஆகிய எவர்களுடைய கூட்டத்திற்குச் சென்றாலும், அவன் வெட்கமும் கலக்கமும் அடைகிறான்; நான்காவதாக, அவன் மரிக்கும்போது கவலை நிறைந்தே மரிக்கிறான்; கடைசியாக, மரணத்திற்குப்பின் உடல் அழிவுற்றதும், அவன் மனம் துயர நிலையிலேயே இருக்கும். அவனுடைய கருமம் எங்கே தொடர்ந்து சென்றாலும், அங்கே துக்கமும் துயரமும் இருக்கும். கிருகஸ்தர்களே, இவையே தீவினையாளன் அடையும் ஐந்து வகை நவுடங்கள்!

  • *

" மனிதன் மரித்த பின்பு அவன் மனம் சம்பந்தமான விஞ்ஞானக் கந்தத்தின் நுண்ணிய பகுதி ஒன்று எஞ்சியிருந்து அடுத்த பிறவிக்குக் காரணமான வினைப்பயனை ஏற்கும் என்பது பெளத்த தருமக் கொள்கைகளுள் ஒன்று. 70 புத்தரின் போதனைகள்