பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால் பேதைமை அடியோடு மறைந்தொழிவதிலிருந்து செய்கைகளும் தீர்ந்துவிடுகின்றன. செய்கைகள் நீர்வதிலிருந்து உணர்ச்சி தீர்ந்துவிடுகின்றன. இவ்வாறே மற்றவையும் நீர்ந்துவிடுகின்றன... இவ்வாறு துக்கம் அனைத்தும் தீர்ந்து போகின்றது. " ('பதிச்ச - சமுப்பாதத்தையும், அதைக் காரணமாய்க் கொண்டே உயிர்கள் தோன்றுவதையும் நன்கு தெரிந்துகொண்ட விடன் தன் இறந்தகால நிலைமையையோ, எதிர்கால நிலைமையையோ, நிகழ்கால நிலைமையையோ எண்ணி ஆராய்ந்து கொண்டிருப்பாளா? 'முன்பு நான் இருந்தேனா? அல்லது நான் இல்லையா? முன்பு நாள் பாதுவாயிருந்தேன்? முன் எப்படி இருந்தேன்? முன்பு நான் எதுவாயிருந்து பொதுவாக மாறினேன்... நான் இனி இருப்பேனா, அல்லது இருக்க மாட்டேனா? எதிர்காலத்தில் நான் எதுவாக இருப்பேன்? எதிர்காலத்தில் நான் எப்படியிருப்பேன்? எதிர்காலத்தில் எதுவாயிருந்து, எதுவாக மாறுவேன்?... இப்போது நான் இருக்கிறேனா, அல்லது இல்லையா? நான் எதுவாக இருக்கிறேன்? நான் எப்படியிருக்கிறேன்? இந்த 'நான் எங்கிருந்து வந்தது, எங்கே செல்லும்? - இத்தகைய வினாக்களை எழுப்பி, உண்மையமான ஆரியச் சீடன் விசாரணை செய்துகொண்டிருப்பானா என்பதற்குப் புத்தர் பெருமான் அருளிய மறுமொழி வருமாறு:)

  • *

ஒருகாலும் இல்லை! அவ்வாறு நடப்பது சாத்தியமில்லை! ஏன் சாத்தியமில்லை? ஏனெனில், ஆரியச் சீடன் தனது நற்காட்சியால், பதிச்ச - சமுப்பாதத்தையும், அதன் காரணமாகவே எல்லாப் பொருள்களும் தோன்றியிருப்பதையும் உண்மையான முறையில் அறிந்திருக்கிறான். ' ப. ராமஸ்வாமி 85