பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6. அறிஞர் இயல்

நம்முறு தவறைக் காட்டும்
நல்லவர் கிடைக்கக் கண்டால்
வெம்மை[1] சேர் பகைவ ராக
வெறுத்திடல் மடமை யாகும்.
நம்முடை நலத்திற் காக
நல்லபொற் புதையல் காட்டும்
செம்மைசேர் நண்ப ராகச்
சிறப்பொடு போற்றல் வேண்டும்.

17


ஆழ்ந்தநீர் நிலையில் தூய்மை
அமைதியோ டிருத்தல் போல
ஆழ்ந்தநல் அறிவு மிக்கோர் .
அகத்தினில் தூய்மை யோடு
தாழ்ந்திடும் அடக்கம் கொண்டு
தரையினர்[2] போற்ற வாழ்வர்
ஆழ்ந்திடத் துடிப்பர் பற்றில்
ஆழறி வில்லா மூடர்.

18


7. அருகந்தர் இயல்

முடுக்குறும் தேரின் பாகன்
முரண்டிடும் பரிகள் தம்மை
அடக்கியே கட்டுள் வைக்கும்
ஆற்றலார் செயலே போல
இடக்குசெய் பொறிகள் ஐந்தும்
இம்மியும் மீறா வண்ணம்
மடக்கியே கட்டிக் காக்கின்
மறைத்திடும் துன்பம் எல்லாம்.

19

7

  1. 25
  2. 26