பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14. புத்தர் இயல்

பொன்னினால் ஆன காசே
பொழியினும் மழையே யாக,
தன்கையால் தொட்ட எல்லாம்
தங்கமே ஆகி னாலும்
உன்னியே[1] அவாவில் ஆழ்ந்தோர்
உளம்நிறை வடைவ தில்லை.
இன்னதீ மயக்கம் தீர்ந்தோர்
இறைஞ்சிடத் தக்கார் ஆவர்.

44


துறவியர் கோலத் தோடு
தொப்பை[2] தான் பெருத்திட் டோரும்
அறிவினை சிறிதும் செய்யா
அரும்பெருஞ் செல்வர் தாமும்
வறியவர் காலில் வீழ்ந்து
வணங்கிட உரியர் அல்லர்.
அறநெறி பற்று வோரே
அனைவரும் வணங்கத் தக்கார்,

45


15. மகிழ்ச்சி இயல்


பகைத்திடும் உணர்வில் லாதோர்
பகைத்திடார் எவரும் நோக;
பகைவரின் நடுவி லேயே
பகையிலா தினிது வாழ்வர்.
பகைத்திடும் உணர்வுள் ளோரே
பகையிலா நண்பர் மாட்டும்
பகைகோடு வாழ்வர், இந்தப்
பகையதை[3]ப் பகைத்தல் வேண்டும்.

46

16

  1. 49
  2. 50
  3. 51