பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25. பிக்கு இயல்

சுமைகுறை வாயி ருப்பின்
சோர்வுறார் பயணம் செய்வோர்;
சுமைமிகின் ஆற்று நீரின்
சுழலிலே ஓடம் ஆழும்;
அமைவிலா[1] வெறுப்புச் சேறும்
அலர்விடும் விருப்பும் கூடின்,
சுமையது மிகுத லாலே
சுழலுமோ வாழ்க்கை வண்டி?

92


அறம்பிறழ் காமத் தீயை
ஆர்ந்திடத்[2] துடிக்கும் செய்கை
இரும்பினால் ஆன கல்லை
எரியினில் பழுக்கக் காய்ச்சி
விரும்பியே நெஞ்சுக் குள்ளே
விழுங்குவ தொப்ப தாகும்
திறம்பெற அதமே செய்து
தீவினை அகற்றி வாழ்க.

93


ஒவ்வொரு வர்த மக்கும்
உற்றிடும் தலைவர் தாமே.
ஒவ்விடா திடக்கு செய்யும்
உயிரினப் பரியைத் தட்டிச்
செவ்விதின் அடக்கி ஒட்டிச்
சென்றிடும் வணிகர் போல,
வவ்விடும் அகந்தை "நானை"[3]
வளர்த்திடா தடக்கல் வேண்டும்

94



32

  1. 91
  2. 92
  3. 93