பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 புத்தர் போதனைகள் -- உணர்ச்சி இல்லாத நிலையில் மன-உடலும் இல்லை; உணர்ச்சி கின்றதும், மன-உடலும் கின்று விடுகின்றது. மன-உடல் இல்லாத நிலையில் உணர்ச்சியும் இல்லை; மன-உடல் நின்றதும் உணர்ச்சியும் கின்று விடுகின்றது.' o பிக்குகளே! :பதிச்ச-சமுப்பாதம்' (பொருளுற் பத்திக்குரிய காரண கியதி) என்பது என்ன? செய்கைகள் பேதைமையால் நிர்ணயிக்கப் படு கின்றன; உணர்ச்சி செய்கைகளால் நிர்ணயிக்கப் படுகின்றது; அரு-உரு (காம-ருபம்) உணர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகின்றது; வா யி ல் (புலன்களின் உணர்வு) அரு-உருவால் நிர்ணயிக்கப்படுகின்றது; ஊறு வாயிலால் நிர்ணயிக்கப்படுகின்றது; நுகர்ச்சி ஊற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது; வேட்கை நுகர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகின்றது: பற்று வேட்கையால் நிர்ணயிக்கப்படுகின்றது; க ரு ம த் தொகுதி பற்றினால் கிர் ணயிக்கப் படுகின்றது; தோற்றம் (பிறப்பு) கருமத் தொகுதியால் நிர்ணயிக்கப் படுகின்றது: வினைப்பயன் தோற்றத்தால் கிர்ண யிக்கப் படுகின்றது. துக்கம் அனைத்தும் தோன்று வது இவ்வாறுதான். ஆனால் பேதைமை அறவே நீங்கி அழிந்து விட்டால் செய்கையும் திர்ந்துவிடும். செய்கை மீள, உணர்ச்சி மீளும், உணர்ச்சி மீள, அருவுரு மீளும், அருவுரு மீள, வாயில் மீளும்