பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. உடல் இந்த உடலாகிய வர்ணம் திட்டிய பொம்மையைப் பார்! இது புண்கள் நிறைந்தது, (எலும்புகளாலும் சதையாலும்) ஒன்றாகக் கோத்து வைக்கப்பட்டது, நோய்க்கு இடமானது, பல எண்ணங்கள் நிறைந் துள்ளது. ஆனால் நிலையில்லாதது! ,疊 இந்த உடல் நலிந்து தேய்வது, இது நோய்களின் கூடு, மிகவும் கொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப் போகும்; வாழ்வின் முடிவு சாவுதான்." உலகப் பற்றுள்ளவன் தன் உடலை வளர்க், கிறான், ஆனால் ஞானி தன் சித்தத்தை வளர்க்கிறான். தன் ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே ஈடுபட்டி ருப்பவன் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான்; ஆனால் தரும நெறியில் கடப்பவன் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதுடன், டிேய வாழ்வையும் பெறு கிறான் .99 | உடல் வலியை இழந்தவன் உண்மை ஞானத்தைப் பெற முடியாது. பசியாலும், தாகத்தாலும் களைப்பாலும் வாடிய ஒருவன் மனநிலை குலைந்து பின் சாந்தியோடிருக்க முடியாது; பூரணமான அமைதியைப் பெற்றாலன்றி, மனத்தினாலேயே அடைய வேண்டியதாயுள்ள முடிவை அவன் எப்படி அடைய முடியும்? புலன்களை இடைவிடாமல் திருப்தி