பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தெரிவதுடன், நிருவான இன்பமும் சித்திக்கும் என்று போதி வேந்தர் அருளியுள்ளார். பெளத்த சமயத்துள் சில உட்பிரிவுகள் இருப்பினும், இந்நூல் தேரவாத பெளத்தத் திருமுறைகளை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பெற்றுள்ளது. மேலை நாட்டு ஆசிரியர் ப ல ர் மொழிபெயர்த்து உ ல கி. ற் கு அளித்துள்ள அழியாப் பெருமையுள்ள நூல்களிலிருந்து பொறுக்கித் தொடுத்த மலர்கள் பல இதிலே இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழியில் பெயர்த்து எழுதியதே என் பணியாகும். இந் நூலின் அதிகார வைப்புக் கவனிக்கத் தக்கது. முதம் பாகத் தில் மனிதன் பெற வேண்டிய நற்குணங்களும், விட வேண்டிய தீக்குணங்களும் கூறப் பெற்றுள்ளன. இரண்டாம் பாகத்தில் பெளத்த தரும அடிப்படைக் கொள்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. தற்பயிற்சியில் ஆரம்பமாகி நூல் நிருவாணத்திலே முடிகின்றது. புத்தர் பென்மொழிகளைத் தேடித் திரிகின்ற காலையில் இத்தகைய ஒரு நூல் என் கையிலே கிடையாமையே இந்த நூலை நான் எழுது வதற்குக் காரணமாக அமைந்தது. இத்துடன் சேர்த்துப் படிக்கவேண்டிய நூல் தம்மபதம். திருநெல்வேலி ப. ராமஸ்வாமி 3-5-56