பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சிந்தனை இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன் முறையான சிந்தனையினால் கன் மையிலே - திளைத்திருக்க ஆரம்பிக்கிறான். செல்வமும் அழகும் நிலையாமையை அவன் கண்டு கொள்கிறான். தருமமே அவனுக்கு |கிகரற்ற அணியாக விளங்குகின்றது. ஆசையைத் துாண்டக்கூடிய ஒவ்வொரு விவடியத் தையும் அவன் எப்போதும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவாவின்மையால் ஏற்படும் வலிமையைப் பெறு கிறான். (ിഖി உதவியைச் சார்ந்து கின்றால், அவன் துக்கமே பெறுகிறான்; தன்னம்பிக்கை கொண்ட வுடன், அவனுக்கு வலிமையும் இன்பமும் கிடைக் கின்றன."

மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிக்தனைகளே அதன் அடிப்படை. சிக்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும், வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.' 품 மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை. சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் கல்லெண்ணத் துடன் பேசினாலும், செயல் புரிந்தாலும், கிழல் தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனை டி. தொடர்ந்து செல்லும். '