பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பொறுமை .யாராவது உங்கள் முன்னிலையில் உங்களை கிந்தித்தாலும், கைமுஷ்டியால் உங்களை அடித்தாலும், உங்கள் மீது களிமண் உருண்டைகளை எறிந்தாலும், கழியால் உங்களைத் தாக்கினாலும், அல்லது வாளால் உங்களை வெட்டினாலும்,- அப்பொழுதுகூட. நீங்கள் அவரைப் பற்றி வெறுப்படையக் கூடாது: "என் இதயம் நிதானம் தவறாதிருக்கும், வெறுப்படையா திருக்கும். நான் துவேஷமான சொல் எதுவும் கூற மாட்டேன். நான் எல்லோரையும் நேசித்துக் கொண்டு, அன்போடு அவர்களுடன் வாழ்ந்து வருவேன்' என்று சொல்வதற்கு நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.'