பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஐயமும் திரியும் ஒரு மனிதனின் உடலில் விடம் தோய்ந்த அம்பொன்று பாய்கிறது. அவ னுடைய கண்பர்கள் உடனே மருத்துவரை அழைத்து வருகின்றனர். மருத்துவர் புண்ணிலிருந்து அம்பை இழுக்க ஆரம்பிக் கிறார். அடிபட்டவன், கில்லுங்கள்! அம்பை எய்தது யார்? ஆனா, பெண்ணா, பிராமணனா, வைசியனா, சூத்திரனா? அவன் குடும்பம் எது? அவன் கெட்டையா, குட்டையா? அம்பு எத்தகையது? இவற்றையெல்லாம் கான் அறிந்துகொள்ளும்வரை அம்பை எடுக்கவிட மாட்டேன்!’ என்று பலபடக் கூறினால், என்ன நேரும்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை கள் கிடைக்கு முன்பே அந்த மனிதன் உயிர் துறப்பான். இதுபோலவே, அப்பாலைக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பது போன்ற தன் கேள்விகளுக் கெல்லாம் விடையறிய விரும்பும் சீடன், துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்க நீக்க மார்க்கம் ஆகிய வைகளைப் பற்றிய உண்மையை உணரு முன்பே மரித்துவிடுவான்." o சந்தேகம் தோன்றுவது இயற்கை, பல தலை முறைகளாகப் பல இடங்களிலே தொடர்ந்து வந்துள் ளவை என்பதற்காக மட்டும் பழைய சம்பிரதாயங் களை கம்பவேண்டாம்; பலர் கூடிப் பேசுகிறாாகள் என்றோ, பரப்பி வருகிறார்கள் என்றோ, வதக்தி களாகிய எ ைத யு ம் கம்பவேண்டாம்; எவரோ பழங்காலத்து முனிவர் ஒருவர் எழுதி வைத்த தைக் காட்டினால், அதை கம்பிவிட வேண்டாம்; நீங்களாகக் கற்பனை செய்துகொள்ளும் விஷயம்