பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. பிறன் இல் விழைதல் மற்றொருவனுடைய தாரத்தை இச்சிக்கும் பேதை கான்கு விதமான பயன்களை அடைவான்: பாவம், அமைதியான உறக்கமின்மை, மூன்றாவதாகப் பழி, நான்காவதாக கரகம்.' பாவம் ஏற்படுகிறது; அத்துடன் பாவிகளுக்குரிய தீய கதியும் அடைய வேண்டும்; அஞ்சி கடுங்கும் ஒருத்தியுடன் ஒருவன் அஞ்சிக்கொண்டே துய்க்கும் இன்பம் மிகவும் அற்பமானது; அரசனும் கடுமையான தண்டனை விதிக்கிறான். ஆதலால் எக்த மனிதனும் பிறன் மனைவியை விரும்புதல் ஆகாது."