பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்-2 உலகம் உய்வதற்காக நான் தருமராஜனாக உலகிலே அவதரித்தேன். Гъ твѣт மறுகரையை அடைந்துவிட்டதால், மற்றவர்கள் நதியைக் கடந்து வர உதவி செய் கிறேன்: நான் முக்தியடைந்து விட்டதால், மற்றவர் கள் முக்தியடைய வழி காட்டுகிறேன்; நான் துக்க நிவாரணம் பெற்று விட்டதால், மற்றவர்கள் ஆறுதல் பெற்றுச் சேம நிலையை அடைவதற்கு உதவி புரி கிறேன். நீயே தான் முயற்சி செய்ய வேண்டும். ததாகதர் உபதேசம் மட்டுமே செய்வர். இந்த மார்க்கத்தில் இறங்கி, தியானத்தில் ஆழ்ந்தவர்களுக்கு (பாவம், மரணம் முதலிய) மாரனுடைய பங் தங்கள் விலகும். -புத்தர்