பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0. ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டியிருக்கின்றது. இதன்படி புத்தர் அவதரித்து இப்போது 2,529 ஆண்டுகளாகின்றன. எனினும், உலகிலே பெரும்பாலான மக்கள் 1956-ம் ஆண்டே (கலி 5058) புத்த வருடம் 2500 எனக் கொண்டு, இவ்வாண்டு மே மீ" 24.உ (வைகாசிப் பூர்ணிமை) யன்று பெருமானின் 2,500-ஆவது பிறந்த தினத்தை ஜயந்தியாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். அவர் அவதரித்த இந்திய நாட்டில் நாடும் நகரும் நன்கறியும்படி இவ்விழா கொண்டாடப் பெறுகின்றது. இந்த ஜயந்தியில் எனது சிறு காணிக்கையாக இந்நூல் வெளிவருகின்றது. எண்பது ஆண்டுகள் இந்திய நாட்டில் தங்கியிருந்து அருளறத்தை உபதேசிதது வந்த புத்தர் பெருமானுக்கு இந்த நாடும், உலகமுமே மிகவும் கடமைப் பட்டவை. பெளத்த தருமம் நிலைபெற்றுத் தழைத்தோங்கியிருந்த o காலத்தி லேயே இந்தியா செல்வமும் செழிப்பும் பெற்று உலகின் நடு நாயகமாக விளங்கி வந்தது எனபதைச் சரித்திரத்திலே காணலாம். கோசல நாட்டிலும், அதைச் சுற்றியிருந்த பிராந்தியங்களிலுமே பரவியிருந்த பெளத்த தருமத்தை உலகப் பெருஞ் சமயமாக்கி உயர்த்திய அசோக சக்கர வர்த்தி மாநில மன்னர்களிலே முதன்மையானவராக இன்றளவும் கருதப்பெற்று வருகிறார். பெளத்த தருமத்தின் விளைவாக நாடெங்கும் கல்வியும் கலைகளும் பெருகி வளர்ந்தன: சிற்பங்களும் சிலைகளும் எக்காலத்தும் இல்லாத முறையில் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத் தாழ்வுகள் குறைந்து, எங்கும் & LF} Гл “F மனப்பான்மை தழைத்தோங்கி வந்தது. புத்த ஞாயிற்றின் ஒளி ஆசியா கண்டத்தின் பல நாடு களிலும் இருளகற்றி, மக்கள் மனங்களிலுள்ள ஊற்றுக் கண் களைத் திறந்து வைத்து, எங்கணும் ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது. சீனாவிலும், ஜப்பானிலும், கொரி யாவிலும், தாய்லாந்திலும், ஜாவாவிலும், சுமத்திராவி அம்: