பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. உபாலைகர்கள் ஒருவன் புறத்திலே ககைகள் அணிந்திருந்தாலும், அவன் மனம் புலன்களை வெற்றி கொண்டிருக்க முடி யும். வெளித் தோற்றம் தரும வாழ்க்கை அன்று. அது உள்ளத்தைத் திண்டாது. சிரமணன் சிவர ஆடையைப் புனைந்துகொண்டே, உலகப் பற்றுக்களில் ஆழ்க் திருக்கவும் முடியும்." ஏகாந்தமான வனங்களிலே தங்கியிருந்தும், ஒருவன் வையகத்தின் ஆடம்பரங்களை விரும்பினால், அவன் உலகப் பற்றில் ஆழ்ந்தவனாவான்; உலகத் தாரைப் போல உடைகள் அணிக்த ஒருவன், தன் இதயத்தை வான மண்டலத்திலே பறக்கவிட்டு, உன்னதமான சி ந் த னை க ளை மேற்கொள்ளவும் கூடும். 景 துறவியும் இல்வாழ்வோனும், கான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டால், இருவர்க்குள்ளும் பேதமே யில்லை." ခို့နိူ့ இல்வாழ்வோர்களே! சிறந்த ஒழுக்கத்தைப் பேணாத ஒருவன் அடையும் கஷ்டங்கள் ஐந்து வகை யானவை. முதலாவதாக, ஒழுக்கமில்லாததால். அவன் மடிமையில் ஆழ்ந்து மிகுந்த வறுமையை அடை கிறான்; அடுத்தாற்போல, அவனைப் பற்றிய இகழ்ச்சி எங்கும் பரவிவிடுகின்றது; மூன்றாவதாக, அவன் பிரா மனர்கள், கூடித்திரியர்கள், குடும்பத் தலைவர்கள், சிரமணர்கள் ஆகிய எவர்களுடைய கூட்டத்திற்குச் சென்றாலும், அவன் வெட்கமும் கலக்கமும் அடை கிறான்; நான்காவதாக அவன் மரிக்கும் போது கவலை