பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 புத்தர் போதனைகள் பிராமணர்களுடைய பேச்சு பரிகாசத்திற்கு இடமாயும், வெறும் சொற்குவியலாயும், பொருளற்ற வெற்றுரை யாயுமே இருக்கின்றது!" ஒரு மனிதன், இந்த காட்டிலுள்ள தலைசிறந்த அழகியை கான் விரும்புகிறேன்; அவளிடம் எவ்வளவு காதல் கொண்டுள்ளேன்!' என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஜ ன ங் க ள் அவனிடம், ,நல்லது அன்ப! நீ காதல் கொண்டு உருகும் காட்டிலே சிறந்த கல்லழகி கூடித்திரிய வமிசத்தைச் சேர்ந்தவளா, பிராமண குலத்தவளா, அல்லது வைசிய, சூத்திர குலத்தவளா?' என்று கேட்பார்கள். அப்போது அவன் என்ன பதில் சொல்ல முடியும்? தெரியாது!’ என்று தான் சொல்வான் , "அந்தத் தலைசிறந்த அழகியின் பெயர் யாது? அவளது குலப் பெயர் என்ன? அவள் நெடிய உருவ முள்ளவளா, குள்ளமானவளா? அவள் கறுப்பா, பொது நிறமா, சிவப்பா? அவள் எந்த ககர் அல்லது கிராமத் தில் வசிக்கிறாள்?' என்றெல்லாம் வினவினால், அவன் ‘தெரியாது!" என்றுதான் பதில் சொல்ல முடியும். அப்போது ஜனங்கள், கண்பா தெரிந்திராத, பார்த்திராத ஒரு பெண் ணிடம் காதல் கொண்டு நீ உருகுகிறாயா?" என்று கேட்பார்கள். அவனும் ஆம்!" என்பான். அதைப் போலத்தான் இதுவும். பிருமம் இருக் கிறது என்றும், அதை அறியாமலும் பாராமலும்