பக்கம்:புத்த ஞாயிறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 புத்த ஞாயிறு

குமாரகவி: ஆமாம்...இந்த வரிகளைச் சொல்லி முடித்து விட்டு உறங்கப் போனுேம் அல்லவா? உறக்கத்தில் நான் நேற்று ஒரு கனவுகூடக் கண்டேன்.

சுகுணு: கனவா? என்ன கனவு? யாரைப் பற்றிய கனவு.

அது? - குமாரகவி: அவசரப்படாதே! என் கண்களுக்கு முன்னல் பளபளக்கும் வண்ணக் கோளங்கள் கறுப்பிலும். வெளுப்பிலும், சிவப்பிலும், நீலத்திலும் என்று ஒரே திராட்சைக் கனிகளாக உருள்கின்றன. உற்றுப்

பார்க்கிறேன். ஒவ்வொரு கனியிலும் உன் முகம் தெரிகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. கனவில்: தான் நான் குருடனக இல்லையே...அதனால் உன் முகத்தை என்னுல் மிகவும் நன்ருக , ஆசை தீரப் பார்க்க முடிந்தது... (சுகுணுவின் கண்களில் நீர் பனிக்கிறது...கைவிரலால் ஒற்றி

எடுத்துப் பெருமூச்சு விடுகிருள்). சுகுளு: அப்புறம்? குமாரகவி: அப்புறம் என்ன? நான் பார்த்துக் கொண் டிருக்கும் போதே அத்தனை கனிகளும் உன் உதடுகளாக மாறி நகைக்கிற மாதிரித் தெரிந்தன. அப்புறம் நான் என்ன செய்தேன் தெரியுமா? அந்தக் கனிரசம் ததும்பு கிற உதடுகளே... (சிரிக்கிருர்) -

சுகுணு போதும்...நீங்களும் உங்கள் கனவும். இன்று கதை. அவ்வளவுதான? மறுபடியும் தூங்குங்கள். இன்னும் ஏதாவது கனவு வரும். குமாரகவி எழுதுவதுதான் இருக்கிறதே...எப்போ து: பார்த்தாலும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவது. நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கதை எழுதி, அச்சுக்குத் தந்து, திருத்தி...என்று முடிவில்லாத பணி அது சுகுணு. இந்தக் காரியத் தளைகளிலிருந்து விடுபட்டு உலகியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/106&oldid=597471" இலிருந்து மீள்விக்கப்பட்டது