பக்கம்:புத்த ஞாயிறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 11.

களுடைய கண்ணிற்கு நம்மைப் போன்ற பிட்சுக்கள் எல்லாம் கேலிப்பொருட்களாகவே தோன்றுகிரு.ர்கள். (குடித்துவிட்டுத் தள்ளாடியபடியே வருகிற ஒரு களிமகனின்-பிதற்றல் ஒலிகள்-அவன் தன் னருகே வரும் பெண்ணிடம் கூறும் -புத்த பிட்சுக்களைப் பற்றிய கேலி வார்த்தைகள்) மு. பிட்சு : இப்படிப்பட்ட பிரத்யட்சவாதிகள் இன்று மிக அதிகமாகி வருகிருர்கள். கண்டதே காட்சி கொண் டதே கோலம்-வாழ்ந்தவரை வாழ்க்கை-நுகர்ந்த வரை இன்பம்" என்று எண்ணுகிறவர்கள் இவர்கள். ஆ...அதோ கேளுங்கள்! அந்தக் களிமகனே குடிவெறி யில் ஒரு பாட்டுப் பாடுகிருன். அவைேடு வருகிற கூத்திப் பெண்ணும் ஏதோ சேர்ந்து உளறுகிருளே...? - (களிமகனும் கூத்தியும் வெறிமிக்க போதையில்

தட்டுத் தடுமாறிப் பாடும் பாட்டு) - இசைப்பாட்டு (1)

- எடுப்பு ஆ. குரல் : கண்டதே காட்சி-கொண்டதே கோலம் பெ. குரல் : ஆம்-கண்டதே காட்சி-கொண்டதே கோலம்

தொடுப்பு - - இந்த மண் வாழ்வின் இன்பங்கள் யாவும் சொந்தமென் ருள்வதே சமயம் ஆம் சொந்தமென் ருள்வதே சமயம். -கண்டதே காட்சி.கொண்டதே கோலம் -தத்துவம் யாவும் செத்தவையாகும். செத்தவை யாவும் பிறப்பதே இல்லை. -கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

முடிப்பு கள்ளும் கனவும் கொள்ளும் சுகமே இன்றும் நாளையும் என்றும் கிஜமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/13&oldid=597376" இலிருந்து மீள்விக்கப்பட்டது