நா. பார்த்தசாரதி 47°
என்பதை இப்போது அடியேன் நன்ருகப் புரிந்து கொண்டேன். முதியவ நல்லது! நான் விடை பெறுகிறேன். உங்கள் பணி
தொடரட்டும். உலகின் பிணி இருளைப் போக்க உதவுங் கள். பசியும், நோயும், நீங்கி வசியும் வளமும் சுரக்கப் பாடுபடுங்கள். மறுபடியும் நினைவூட்டுகிறேன்.இலட்சிய வாதியான பிட்சு ஒருவனுக்கு அவனுடைய மனந்தான் கோமுகிப் பொய்கை. அங்கே சுரக்கும் கருணையே நீர்ப் பெருக்கு. மறந்துவிடாதீர்கள்.
(சிறிது பேச்சை நிறுத்தி) புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி (பதிலுக்கு அவரும் அதையே கூறுகிருர்) . (உலக அறவியில் எல்லாரும் சேர்ந்து இந்த மூன்று வாக்கியங்களே - மந்திரம்போல் நிறுத்தி உச்சரித்துக் நிறுத்திக் கூறிவிட்டுக் கீழ்வரும் பாடலைச் சேர்ந்து பாடுகின்றனர்) . - இசைப்பாடல் (5)
ஆதி அமலன்
போதி மாதவன் புண்ணிய சீலன் மாதவச் செல்வன்
மணிமுடி துறந்தேன் நாதன் நல்லவன்
நலிவுகள் தீர்ப்பவன் பாத பங்கயம் -
பணியப் பணிய வேதனை தீரும் .
விங்தைகள் நிகழும்-உலகில் விந்தைகள் நிகழும்
(திரை)